நிலக்கரி சுரங்க ஊழல்.. குப்தா உள்ளிட்ட 6 பேரின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
Recommended Video
டெல்லி: நிலகக்ரி சுரங்க ஊழல் வழக்கில் குப்தா உள்ளிட்ட 6 பேரின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு அளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பு வாதம் செய்தது. அந்த நிறுவனத்தின் ரூ.117 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.