காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் இன்று இரவு அறிவிப்பு.. தேர்வு நடைமுறையில் சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து இன்று இரவு அக்கட்சியின் காரிய கமிட்டிக்கு பிறகு அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியாவும் , ராகுலும் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்திக்கு பின்னர் சோனியா அப்பதவியை வகித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாகவும் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்காகவும் ராகுல்காந்தி தலைவராக கொண்டு வர அவர் விரும்பினார்.
அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ராகுல் தலைவர் பதவியை வகித்து வந்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் மோடியை எதிர்த்து ராகுல் நிச்சயம் வெற்றி பேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார். இதையடுத்து கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் விரும்பினர்.
Delhi: Congress Working Committee (CWC) meeting underway at party office. pic.twitter.com/2RbzDziJXo
— ANI (@ANI) August 10, 2019
எனினும் விடாப்பிடியாக அவர் ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராதவரை தலைவராக கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த தலைவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஆலோசனை நடத்தி வந்தது.
டெல்லியில் உள்ள சோனியா இல்லத்தில் மூத்த நிர்வாகிகள் ஏகே அந்தோணி, அகமது படேல், கேவி வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய தாமதம் நிலவக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி முடிவடைந்தது. இதில் சோனியா, ராகுல்காந்தி, மீரா குமார், ஹரீஷ் ராவத், அகமது படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏற்கெனவே தலைவர்களாக இருந்தவர்கள் என்பதால் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என சோனியாவும், ராகுலும் தெரிவித்துவிட்டனர். இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை. இன்று இரவு மீண்டும் 8 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் மீண்டும் கூடுகிறது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.