டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கணிப்புகளை நம்ப மாட்டோம்... மே 23ம் தேதி வரை காத்திருங்க 'சர்ப்ரைஸ்' இருக்கு.. காங்கிரஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்பு முடிவுகள்

    டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்துள்ளது

    நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஆரம்பித்து மே 19ம் தேதி நிறைவடைந்தது.

    இதில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேசிய ஊடகங்கள் கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளன.

    என்னாபா இது.. செம 'செட்டிங்'கா இருக்கும் போலயே.. எக்ஸிட் போல்களை நிராகரிக்கும் மக்கள்! என்னாபா இது.. செம 'செட்டிங்'கா இருக்கும் போலயே.. எக்ஸிட் போல்களை நிராகரிக்கும் மக்கள்!

    2009எப்படி இருந்துச்சு

    2009எப்படி இருந்துச்சு

    2004ம் ஆண்டு நடந்த தேர்தல் கணிப்புகளில் பாஜகவே மீண்டும் வெல்லும் என தேசிய ஊடகங்கள் கணித்தன. அந்த கணிப்புகளை மீறி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, இடதுசாரிகள் உதவியுடன் ஆட்சி அமைத்தது. இதேபோல் 2009ம் ஆண்டும் பாஜக அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்புகள் வந்து அதுவும் பலிக்கவில்லை. இந்த சம்பவங்களை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் இன்றைய கணிப்புகளை நிராகரித்துள்ளன.

    சர்ப்ரைஸ் இருக்கு

    சர்ப்ரைஸ் இருக்கு

    குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தலுக்கு பிந்தையக கருத்துக்கணிப்புகளை முற்றிலும் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்திதொடர்பாளர் ராஜீவ் கௌடா கூறுகையில், "மே 23ம் தேதி வரை காத்திருங்க, நாங்க(காங்கிரஸ்) உங்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் தருவோம். இந்த கட்சி இத்தனை சீட்டுகள் பெறும் என கணித்து சொல்வது மிகவும் கடினமானது.

    பலமான திட்டம்

    பலமான திட்டம்

    ஏனெனில் நாட்டு மக்களிடையே யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை சொல்வதில் ஒருவித பயம் மனரீதியாக இருக்கிறது. அதனால் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க மாட்டார்கள்" என்றார். இதனிடையே காங்கிரஸ் கட்சி பொடி வைத்து பேசி இருப்பதால் ஏதேனும் பலமான திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது.

    மம்தா தாக்கு

    மம்தா தாக்கு

    இதனிடையே மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்த மாதிரியான தேர்தல் கணிப்பு என்ற வதந்திகள் மூலம் ஆயிரக்கணக்கான ஈவிஎம் மிஷின்களை மாற்றுவதே பாஜகவின் திட்டம் என்றும் மக்கள் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    lok sabha elections 2019 : Congress rubbished exit polls, surprise awaits on May 23
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X