டிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ராஜீவ் தியாகி இன்று பங்கேற்றார். இதன் பின்னர் தமது வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ் தியாகி உயிர் பிரிந்தது. இன்று மாலை 5 மணிக்கு தமது ட்விட்டர் பக்கத்தில், டிவி விவாத நிகழ்ச்சியில் தாம் பங்கேற்பது பற்றி பதிவு போட்டிருந்தார்.
உ.பி.யில் காங். புது வியூகம்... முதல்வர் வேட்பாளராக பிராமணரை அறிவிக்க திட்டம்- பாஜகவுக்கு நெருக்கடி
இதன் பின்னர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். ராஜீவ் தியாகியின் மரணத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.