திரும்ப திரும்ப பேசுற நீ.. டிவி விவாதத்தில் நடந்த சண்டை.. தண்ணீர் கிளாஸை வீசி தாக்குதல்.. வீடியோ!
டி.வி விவாதத்தின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தண்ணீர் கிளாஸை வீசி எறிந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: டி.வி விவாதத்தின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தண்ணீர் கிளாஸை வீசி எறிந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது இந்தியா ராணுவம் பிரதமர் மோடியின் சேனை பேசினார். மோடியின் சேனை தீவிரவாத முகாம்களை அழித்தது. காங்கிரஸ் முடியாது என்று நினைத்த விஷயங்களை நாங்கள் முடித்து காட்டி இருக்கிறோம் என்று கூறினார்.
ஆதித்யநாத்தின் இந்த பேச்சு குறித்து வடஇந்திய தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில்தான் இந்த சண்டை நடந்தது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மா, பாஜக செய்தி தொடர்பாளர் கே.கே.சர்மா மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் கலந்து கொண்டு பேசினர்.
பாரத பிரதமர் அப்துல் கலாம்.. இல்லை இல்லை பாரத பிரதமர் மோடி.. கன்பியூஸ் ஆன அமைச்சர் சரோஜா!
என்ன பேசினார்
இதில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் இடையே கடுமையான வாதம் நடந்தது. யோகி செய்தது சரிதான் என்று தொடர்ந்து பாஜக உறுப்பினர் பேசிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் கோபம் அடைந்த பாஜகவின் கேகே சர்மா, அலோக் சர்மாவை துரோகி என்று கோபமாக குறிப்பிட்டார்.
அமைதி
ஆனால் இதை செய்தி நெறியாளர் கண்டிக்காமல் இருந்தார். பாஜக உறுப்பினர் பேசுவதை தொடர்ந்து அமைதியாக நெறியாளர் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மா எழுந்து நின்று கத்தினார். அதோடு அங்கிருந்த தண்ணீர் கிளாஸை தூக்கி எறிந்தார்.
தண்ணீர் ஊற்றினார்
சரியாக நெறியாளர் மீது தண்ணீர் ஊற்றும்படி அவர் தண்ணீர் கிளாஸை வீசினார். பின் அந்த கிளாஸ் தரையில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து தொடர்ந்து இரண்டு தரப்பினரும் கடுமையான வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர்.
|
வைரல் வீடியோ
உடல் முழுக்க தண்ணீரோடு அந்த நெறியாளரும் கடுமையான வாதங்களை செய்தார். அதன்பின் சண்டை அதிகம் ஆகவே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.