காங்கிரஸ் கடுமையான விலை கொடுக்க போகிறது.. பொங்கி எழும் மாயாவதி.. இதுதான் காரணம்!
பகுஜன் சமாஜ் கட்சியை எதிர்த்தால் காங்கிரஸ் கட்சி மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்து உள்ளார்.
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியை எதிர்த்தால் காங்கிரஸ் கட்சி மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடையில் நாளுக்கு நாள் பிளவு ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.
இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வரும், யார் ஆட்சி அமைக்க போவது என்பது குறித்த பல விவாதங்கள் நடந்து வருகிறது.
மத்திய பிரதேச ஆட்சி
மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் 231 இடங்களில் காங்கிரஸ் கட்சி 113ல் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. இதனால் 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது. இதில்தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
உங்க அப்பாவின் வாழ்க்கை ஊழலோடுதான் முடிந்தது.. ராகுலை கடுமையாக சீண்டும் மோடி!
மாற்றம்
மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 20 தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாறிவிட்டனர். இதில் சில முக்கிய தலைவர்கள், எம்.பிக்கள் , முன்னாள் எம்.எல்.ஏக்களும் அடங்குவர். இது தற்போது மாயாவதிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாயாவது கோபம்
அதன்படி, காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் ஆட்களை தொடர்ந்து தனது கட்சிக்கு இழுத்தால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டி இருக்கும் என்று மாயாவதி பேசி உள்ளார். இது தொடர்பாக மாயாவதி அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸ் கட்சி எங்கள் உறுப்பினர்களுக்கு வலைவீசுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
வாஜ்பாய் ஆட்சி
காங்கிரஸ் ஆட்சியை நாங்கள் நினைத்தால் கவிழ்க்க முடியும். ஏற்கனவே வாஜ்பாய் அரசுக்கு நாங்கள் செய்ததை காங்கிரசுக்கு செய்ய வேண்டி இருக்கும். காங்கிரஸ் எங்களை எதிர்த்தால் மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மாயாவதி குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடையில் நாளுக்கு நாள் பிளவு ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.