இனிமேலும் காங்கிரஸ் தலைமையை யாரும் குறை சொல்ல கூடாது.. அவ்வளவுதான்.. ராகுல் காந்தி வியூகம்
Recommended Video
டெல்லி: 3 மாநில முதல்வர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் குறைந்தபட்சம் தலா இரண்டு பேராவது முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
இவர்களில் யாரை அந்தந்த மாநிலங்களில் முதல்வராக்குவது என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து நேற்று முதல், தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இன்று காலை நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இதுபற்றிக் கூறுகையில், முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பது குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவிலேயே மூன்று மாநிலங்களுக்குமான முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்து அறிவிக்கும் நபர் தான் முதல்வராக வர முடியும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இம்முறை ராகுல் காந்தி புதிய வியூகத்தை வகுத்துள்ளார்.
இதன் காரணமாகத்தான் ஆண்ட்ராய்டு ஆப், மூலமாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு, முதல்வர் வேட்பாளர் பெயரை அவர் இறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.