பேர் என்ன.. சொன்னதுதான் தாமதம்.. சரமாரியாக அடித்து நொறுக்கப்பட்ட முஸ்லீம் வியாபாரி.. டெல்லியில் ஷாக்
முஸ்லிம் நபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
டெல்லி: "என் பேர், மதம் என்ன என்று கேட்டார்.. நான் முஸ்லிம் என்று சொன்னவுடனேயே கொரோனாவைரஸ் பரப்புவதாக சொல்லி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்துவிட்டார்" என்று நபர் ஒருவர் மீது காய்கறிகாரர் முகமது சலீம் என்பவர் போலீசில் புகார் தந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சலீமை கண்மூடித்தனமாக தாக்கும் இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி பத்ராபூரில் உள்ள ஒரு தெருவில் காய்கறி விற்க வந்துள்ளார் முகமது சலீம்.. தள்ளுவண்டியில்தான் வியாபாரம்.. தெரு தெருவாக காய்கறிகளை விற்று வருபவர்.
அந்த தெருவுக்கள் காற்கறி விற்க வந்ததை பார்த்த பிரவீன் பப்பார் என்பவர் "உன் பேர் என்ன" என்று கேட்டார்.. அதற்கு "முகமது சலீம்" என்று வியாபாரி சொல்லவும், "எங்கே உன் அடையாள அட்டையை காட்டு" என்று கேட்டிருக்கிறார்.
காய்கறி
இப்படித்தான் தகராறு வலுத்துள்ளது.. காய்கறி விற்க தெருவுக்குள் வந்தவரிடம் அடையாள அட்டை இல்லை போல தெரிகிறது.. இதனால் சலீமை மிக மோசமாக கெட்ட கெட்ட வார்த்தைகளல் திட்டி உள்ளார் பிரவீன்... அத்துடன் அடித்தும் உதைத்துள்ளார்.. "இனிமேல் தெருவுக்குள் அடையாள அட்டை இல்லாமல் வந்தால் அவ்வளவுதான்"... என்று மிரட்டி உள்ளார்.
பிரவீன்
இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது.. போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.. சுதான்ஷூ என்பவர்தான், சலீமை அடித்து உதைத்தவர் பிரவீன் என்று போலீசில் அடையாளம் காட்டி உள்ளார். இதையடுத்து பிரவீனை போலீசார் மடக்கி விசாரித்தனர். அதற்கு "லாக்டவுன் விதிமுறைகளை மீறி எங்கள் ஏரியாவில் காய்கறிகள் விற்று வந்தனர்.. அதனால் இப்படி வந்த 10க்கும் மேற்பட்ட காய்கறிக்காரர்களை விரட்டினோம்.. அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவும் கோபத்தில் தாக்கினோம்" என்று சொன்னார்.
பிரவீண்
ஆனால் போலீசில் சலீம் சொல்வதோ வேறு மாதிரியாக இருந்தது.. "தெருவில் காய்கறி விற்றுகொண்டு வந்தேன்.. அப்போது பிரவீன்என்னிடம், என் பேர், என்ன மதம் என்று கேட்டார்.. நான் முஸ்லிம் என்று சொன்னவுடனேயே கொரோனாவைரஸ் பரப்புவதாக சொல்லி என்னை அடித்துவிட்டார்" என்றார். இதனிடையே சலீமை கண்மூடித்தமாக தாக்கும் ஒரு நிமிட வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதிர்ச்சி
அதில் ஒரு நீளமான தடியால் சலீமை அடிக்கிறார் பிரவீன்.. தெருவில் இருந்தவர்கள் இதை பார்க்கிறார்களே தவிர யாரும் முன்வந்து தடுக்கவில்லை.. ஒருகட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் சலீம் கையெடுத்து கும்பிடுகிறார்.. ஆனாலும் பிரவீன்அதை பொருட்படுத்தவில்லை.. தொடர்ந்து அடிக்கிறார். இந்த காட்சியை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
Recommended Video
வேதனை
இதையடுத்து பிரவீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இந்த கொரோனாவை விரட்ட அனைவரும் போராடி வரும் இக்கட்டான நேரத்தில்கூட, ஒருசிலர் இப்படி மதத்தை கட்டவிழ்த்து விடுவது வேதனையாக உள்ளது என வேதனை தெரிவிக்கிறார்கள் மக்கள்!!