பிரிட்டனில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 691 பேர் மரணம் - உலகம் முழுவதும் 12,580 பேர் பலி
உலகம் முழுவதும் ஒரே நாளில் 12,580 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதன் முழுவதும் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 17.22,162 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் ஒரே நாளில் 12,580 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதன் முழுவதும் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 17.22,162 ஆக உயர்ந்துள்ளது. புதிய வகை வைரஸ் நோய் பரவி வரும் பிரிட்டனில் 691 பேர் ஒரே நாளில் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
இப்போது பிரிட்டன் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. ஒரே நாளில் பிரிட்டனில் 36,804 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் 21,10,314 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் 691 பேர் ஒரே நாளில் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 68,307 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா தொற்று ஆளானவர்கள் எண்ணிக்கை 29,0,6,503 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் 28,776 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 561 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் 51,912 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 23,19,520 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை:
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,830 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3,30,192 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 331 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மொத்தம் 146,476 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் 963 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 188,285ஆக உயர்ந்துள்ளது
ரஷ்யாவில் 561 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 51,912 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 487 பேர் உயிரிழந்துள்ளனர் இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 61,702 ஆக அதிகரித்துள்ளது.
புது வகை கொரோனா...விவசாயிகள் போராட்டம்....பரபரப்பான சூழ்நிலையில்...இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!
பிரிட்டனில் 691 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 68,307 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலி நாட்டில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 628 பேர் மரணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 69,842 ஆக உயர்ந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் 944 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,241 ஆக அதிகரித்துள்ளது.