தமிழக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா- வெள்ளியன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தமிழக புொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு குண்டுராவ் அறிவுறுத்தியுள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்கியுள்ளது. மக்கள் பணியில் ஈடுபடும் அரசியல்வாதிகள், போலீஸார், மாவட்ட நிர்வாகத்தினர், உள்ளூர் நிர்வாகத்தினர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன...? 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.!
தற்போது பெங்களூரில் உள்ள தனது வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட தினேஷ் குண்டுராவ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.