இந்தியாவில் கொரோனா தாக்கம் விஸ்வரூபம்- 3,087 பேருக்கு பாதிப்பு- 85 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 3,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று நோய் மொத்தம் 85 பேரை பலி கொண்டிருக்கிறது.
Recommended Video
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 21 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா. மொத்தம் 490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து டெல்லியில் 3-வது இடமாக அதிக பாதிப்பு உள்ளது.
5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் 386 பேருக்கு பாதிப்பு
டெல்லியில் 386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் 295 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 179 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். தெலுங்கானாவிலும் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா, உ.பி. நிலவரம்
ஆந்திராவில் 164 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 172 பேரும் கர்நாடகாவில் 128 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 149 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் மரணமடைந்துள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ள குஜராத் மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஹரியானாவில் ஒருவர் பலி
மேற்கு வங்கத்தில் 6 பேரும் ஜம்மு காஷ்மீரில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 75 பேரும் மேற்கு வங்கத்தில் 53 பேரும் ஹரியானாவில் 58 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 5 பேரை பலி கொண்ட பஞ்சாப்பில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இமாச்சல பிரதேசத்திலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிற மாநிலங்களில்...
சண்டிகர், அஸ்ஸாம், லடாக், அந்தமான் மற்றும் உத்தரகாண்ட்டில் 10 முதல் 18 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கோவா, ஒடிஷாவில் இன்று புதியதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் தலா மொத்தம் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுராவில் இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என பதிவாகி உள்ளது.