டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 3.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. ஒரே நாளில் 488 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் நோய்த் தொற்றுக்கு 488 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்..

நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது..

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

    கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக கடுமையாக உயர்ந்த நிலையில், நேற்று ஓரளவு குறைந்துள்ளது.. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கை இதுதான்:

     மின்னல் வேகத்தில் பரவும் 3ஆம் அலை.. இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் அதே நிலைதான்.. தாண்டவமாடும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் 3ஆம் அலை.. இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் அதே நிலைதான்.. தாண்டவமாடும் கொரோனா

    பாதிப்பு

    பாதிப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. இதையடுத்து மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.. கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.38 லட்சமாக இருந்தது... இது அடுத்தநாள் 2.82 லட்சமாகவும், அதற்கு அடுத்த நாள், 3.17 லட்சமாகவும் உயர்ந்தது.. நேற்று முன்தினம் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 3.47 லட்சமாக காணப்பட்டது.. இந்த எண்ணிக்கைதான் நேற்றை தினம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

    இந்தியா

    இந்தியா

    நேற்று முன்தினம் 19,35,912 கொரோனா டெஸ்ட்கள் செய்யப்பட்டிருந்தன.. இதன்மூலம் தினசரி கேஸ்களின் பாதிப்பானது, 17.94 சதவீதத்தில் இருந்து 17.22 ஆக குறைந்தது.. இந்தியாவிலேயே தொற்று வைரஸ் அதிகமாக பாதித்த முதல்மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.. மொத்தம் 48,270 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்... புனே நகரத்தில் ஒருநாள் பாதிப்பு 16,618 ஆக உயர்ந்துள்ளது..

    கேரளா

    கேரளா

    இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 48,049 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. கேரளாவில் 41,668 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் தொற்று பாதிப்பு 29,870 ஆக உயர்ந்துள்ளது.. குஜராத் மாநிலத்தில் 21,225 பேருக்கும் ராஜஸ்தானில் 16,878 பேருக்கும், உபியில் 16,159 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.... ஒரே நாளில் கொரோனாவைரஸுக்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்..

     ஒமிக்ரான் வைரஸ்

    ஒமிக்ரான் வைரஸ்

    இப்போதைக்கு 3,63,1482 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.. தற்போது 21,13,365 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.. அதேபோல ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது... நாடு முழுவதும் நேற்று 67,49,746 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.. இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 கோடியே 16 லட்சத்தை தாண்டிவிட்டது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus 3.37 lakh new covid cases in India 2.7 fewer than yesterday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X