அறிகுறியே இல்லை.. ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு திடீர் கொரோனா பாதிப்பு.. புதிய சிக்கல்!
டெல்லி: ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா வந்தே பாரத் மிஷன் ஆபரேஷனை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி கடந்த மே 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வரும் 13ம் தேதி வரை இந்த மீட்பு பணி நடக்கும். பல நூறு இந்தியர்கள் இதுவரை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வந்தே பாரத் மிஷன்.. 178 தமிழர்களை திருச்சிக்கு மீட்டு வந்த "கேப்டன் கவிதா".. அசர வைத்த ஆபரேஷன்!
நேற்று மொத்தம் 77 விமானிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் பலர் மூத்த பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறியே இல்லை. அறிகுறியே இல்லாமல் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற விமானிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஐந்து விமானிகளும் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை ஓட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர்கள் கடந்த ஏப்ரல் 20ம் தேதி விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.
இந்த விமானம் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டதாகவும், அவசர அரசு தேவைக்கு இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு கொரோனா வந்திருக்கலாம். இந்தியாவில் விரைவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்கிறார்கள். இந்த நிலையில் விமானிகள் 5 பேருக்கு கொரோனா இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.