கொரோனா பாதிப்பு- தமிழகம், குஜராத், தெலுங்கானாவில் ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
டெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழகம், குஜராத் மற்றும் தெலுங்கானாவுக்கு மத்திய குழு வருகை தர உள்ளது.
Recommended Video
மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே 6 குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த குழுக்கள் ஆய்வு நடத்தின.
கொரோனா பாதித்த மாவட்டங்களில் நிலைமை என்ன? லாக்டவுன் ஏற்படுத்தியிருக்கும் தக்கம் என்ன? ஆகியவை குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர் பகுதிகளில் ஒரு குழுவும் ஜல்பைகுரி, டார்ஜிலிங், கலிம்போங் ஆகிய இடங்களில் மற்றொரு குழுவும் ஆய்வு நடத்தியது.
மேற்கு வங்கத்தில் மத்திய குழு ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையானது. மத்திய குழுவை அனுப்பி வைத்தது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக அம்மாநில ஆளுநருக்கும் மமமதாவுக்கும் இடையேயான மோதல் வெடித்தது. இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று ஒரே நாளில் 52.. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் முக்கால் பங்கு சென்னைக்குதான்
இந்த நிலையில் மேலும் 4 குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைக்க உள்ளது. இந்த குழுவினர் தமிழகம், தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆய்வு நடத்த உள்ளது.