மாட்டு சாணம் பூசுங்கள்.. கோமியம் குடியுங்கள்.. கொரோனாவை போக்க ஒரே வழி.. இந்து மகா சபா தலைவர் யோசனை
கோரோனா வைரஸ் தாக்குதலை மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொண்டு குணப்படுத்தலாம் என்று இந்து மகா சபா தலைவர் சக்ரபானி மகாராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: கோரோனா வைரஸ் தாக்குதலை மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொண்டு குணப்படுத்தலாம் என்று இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் கோரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 304 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதுவரை 14500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
மிக கஷ்டம்
சீனாவில் பரவி வரும் இந்த கொரானா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகி வருகிறது என்று சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுகிறது. விலங்குகளிடம் இருந்து இன்னொரு மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.
எப்படி மருந்து
இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று தெரிந்தால்தான் அதை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவின் உஹன் பகுதியில்தான் முதலில் இது தாக்கப்பட்டது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது உருவாகி இருக்கலாம்.ஆனால் இதுவும் கூட உறுதியாக சொல்லப்படவில்லை. அங்கிருந்து மக்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால இது உறுதி செய்யப்படவில்லை.
கருத்து
இந்த நிலையில் கோரோனா வைரஸ் தாக்குதலை மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொண்டு குணப்படுத்தலாம் என்று இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ் தெரிவித்துள்ளார். அதில், மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொண்டு இதை குணப்படுத்தலாம். அதேபோல் இதற்கு யாகம் வளர்க்கலாம். உடலில் சாணத்தை பூசி, நெருப்பு முன் யாகம் வளர்க்கலாம். அது பெரிய அளவில் உதவும். மக்கள் இதன் மூலம் குணம் அடைவார்கள்.
உலகம் எப்படி
உலகம் முழுக்க இதை செய்யலாம். இந்த யாகம் மூலம் உலகம் முழுக்க வைரஸ் தாக்குதலை குணப்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. உலகம் முழுக்க இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். உலக சுகாதார மையம் இதை உலக மெடிக்கல் எமர்ஜென்சி என்றும் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்து மகா சபையின் தலைவர் இப்படி கூறியது பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.