டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலத்தில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

Recommended Video

    ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஏன் ஆபத்தானது?

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் படுதீவிரமாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்பும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

    கொரோனா நிவாரண நிதி 2000.. நாளை முதல் வழங்கப்படும்.. முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்புகொரோனா நிவாரண நிதி 2000.. நாளை முதல் வழங்கப்படும்.. முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

    கேரளாவில் அதிகம்

    கேரளாவில் அதிகம்

    கேரளாவில்தான் மிக அதிகபட்சமாக 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கேரளாவில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 9 பேர் பலியாகி உள்ளனர்.

    கர்நாடகாவில் 88 பேர் பாதிப்பு

    கர்நாடகாவில் 88 பேர் பாதிப்பு

    கர்நாடகாவில் 88 பேர் பாதிக்கப்பட்டும் 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தம் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தெலுங்கானாவில் 70 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

    குஜராத்தில் இதுவரை 6 பேர் பலி

    குஜராத்தில் இதுவரை 6 பேர் பலி

    கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இம்மாநிலத்தில் 6 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா. மொத்தம் 69 பேர் இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து ராஜஸ்தானில் 69 பேரும் தமிழ்நாட்டில் 67 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பலியாகி இருக்கிறார்.

    பிற மாநிலங்களில்...

    பிற மாநிலங்களில்...

    மத்திய பிரதேசத்தில் 2 பேரும் பஞ்சாப், காஷ்மீரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 47 பேரும் பஞ்சாப்பில் 39 பேரும் காஷ்மீரில் 45 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 2 பேரும் பீகாரில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதேபோல் இமாச்சல பிரதேசத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    English summary
    The Coronavirus death toll in India has reached 32.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X