மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா
டெல்லி: மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதை மலேசியா கடுமையாக விமர்சித்தது. இதனால் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது.
இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன. தற்போது மலேசியாவும் இம்மாத்திரைகளை கோரியதால் இந்தியா வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன?