தலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்
டெல்லி: கொரோனா லாக்டவுனால் வேலைகளை பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் டெல்லியை விட்டு தொடர்ந்து நடைபயணமாக வெளியேறி வருகின்றனர்.
Recommended Video
கொரோனாவின் கொடூர தாக்கம் இந்தியாவில் பல லட்சக்கணக்கான அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் பெரும் அச்சமடைந்துள்ள அவர்கள் தலைநகர் டெல்லியை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. ஆகையால் பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு குடும்பத்தினருடன் தார் சாலைகளில் இந்த தொழிலாளர்கள் நடந்தே செல்கின்றனர்.
Together we can!
— DD News (@DDNewslive) March 30, 2020
221 Battalion of @crpfindia distributes food to migrant workers in Greater Noida, UP#IndiaFightsCoronavirus pic.twitter.com/Aw6PXLBand
இப்படி டெல்லியை விட்டு வெளியேறியவர்களுக்கு உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான நொய்டாவில் சி.ஆர்.பி.எப். ராணுவ வீரர்கள் உணவு உள்ளிட்டவை வழங்கி உதவி செய்தனர்.