டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 900ஐ தாண்டி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 900ஐ தாண்டி உள்ளது. நாடு முழுக்க 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது ஸ்டேஜ் 2 பரவல் முறையில் கொரோனா பரவி வருகிறது. இது விரைவில் ஸ்டேஜ் 3யை எட்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் இந்தியாவில் கொரோனா தீவிரம் அடையலாம் என்கிறார்கள்.

    இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    இந்தியாவில் 21 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாடு முழுக்க 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 84 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளானார். 840 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகமாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளா எப்படி

    கேரளா எப்படி

    கேரளா எப்படி கேரளாவில் இன்று முதல் நபர் கொரோனாவால் பலியானார். அங்கு காசர்கோட்டில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் காசர்கோட்டில் 83 பேர் பாதிக்கப்பட்டு உளளனர். கண்ணூரில் 25 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே சமயம் மகாராஷ்டிராவில் அதிகமாக 167 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மகாராஷ்டிரா நிலை

    மகாராஷ்டிரா நிலை

    அங்கு இதுவரை நான்கு பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 74 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 59 பேருக்கு கொரோனா ஏற்ப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 54 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. ராஜஸ்தானில் 54 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு இளைஞருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவருக்கு சென்னையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Coronavirus: Number of affected people reached 918 in India so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X