டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
டெல்லி: கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது நோயாளி திடீரென 3- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
டெல்லி ஐபி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் கொரோனா அறிகுறியுடன் கடந்த மாதம் 31-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு அவர், சிகிச்சை பெற்று வந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்த மற்றவர்கள் அவரை உடனடியாக மீட்டனர்.
தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார் அந்த நபர். கொரோனா தாக்கத்தால் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இது கொரோனா சிகிச்சை பெறுவோரிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா: ராகுலும் பிரியங்காவும் 144 தடை உத்தரவை மீறியதாக வைரலாகும் வீடியோ- உண்மை என்ன?
ஆனால் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழக்க அவசியம் எதுவும் இல்லை என்பது மருத்துவர்கள் கருத்து.