ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகம்- அதி உச்சம்!
டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 31,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் இது 32,719 ஆக இருந்தது. ஆனால் இந்தியாவில் இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்ததாக உள்ளது பாதிப்பு.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது- 11 நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் 50 லட்சம் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,81,156 ஆக உயர்ந்திருக்கிறது. உலகில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு 4,382,263 ஆக உள்ளது.
இந்தியாவில் அதிகம்
உலக நாடுகளில் இந்தியாவில்தான் ஒரே நாளில் கொரோனா மரணங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1,290 பேர் கொரோனாவால் மாண்டனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 82,066.
அமெரிக்காவில் குணமடைந்தவர்கள்
ஆனால் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,99,947 ஆகவும் பிரேசிலில் கொரோனா மரணங்கள் 1,33,119 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 40,55,231 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,25,978.
இந்தியா ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 82,844 ஆகும். உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,42,361. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையானது 9,95,933ஆக மட்டுமே உள்ளது.