கொரோனா.. இந்தியாவில் 50 ஆயிரத்தை கடந்த பலி எண்னிக்கை.. 24 மணி நேரத்தில் 951 பேர் பலி!
டெல்லி: கொரோனா காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62935 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2588157 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 1859079 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 51523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 50084 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 951 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக 678503 பேர் உள்ளனர். மஹாராஷ்டிராவில் தற்போது 584754 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 19749 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தற்போது 332105 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 5641 பேர் பலியாகி உள்ளனர்.
அதிர்ச்சி தரும் சென்னை.. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. உள்மாவட்டங்களிலும் வேகம் எடுக்கிறது!
ஆந்திர பிரதேசத்தில் தற்போது 281817 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 2562 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் தற்போது 219926 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 3832 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
டெல்லியில் தற்போது 151928 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு மொத்தம் 4188 பேர் பலியாகி உள்ளனர்.