அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வரும் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் மட்டும் கிடுகிடு
டெல்லி: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,70,997 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 2,30,94,200 பேர் மீண்டுள்ளனர். 9,68,873 பேர் பலியாகி விட்டனர். தற்போது 7,407,924 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் நேற்று 74493 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் ஒரே நாளில் அதிக மரணத்தையும் இந்தியா சந்தித்துள்ளது.
டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,70,997 ஆக உயர்ந்துள்ளது.இதில் இதுவரை 2,30,94,200 பேர் மீண்டுள்ளனர். 9,68,873 பேர் பலியாகி உள்ளனர்.
உலகில் அதிக தொற்று எண்ணிக்கையுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 70,45,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் 55,60,105 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 3வது அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள பிரேசிலில் இதுவரை 4,560,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 4வது அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள ரஷ்யாவில் இதுவரை 1,109,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகிலேயே கொரோனாவால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 204,475 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே 2வது அதிக மரணத்தை சந்தித்த நாடாக பிரேசில் உள்ளது, அங்கு 137,350 பேர் பலியாகி உள்ளனர்,. உலகிலேயே 3வது அதிக மரணத்தை சந்தித்த நாடாக இந்தியா உள்ளது, இங்கு 88,955 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்
கொரோனாவுக்குப் பிந்தைய உடல் உபாதைகளால் அவதியா.. பயப்படாதீங்க.. ஈஸியாக எதிர்கொள்ளலாம்.. டாக்டர் தீபா
உலகிலேயே அதிகபட்சமாக கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 1056 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் ஒரே நாளில் 455 பேரும், அர்ஜெண்டினாவில் 429 பேரும், அமெரிக்காவில் 357 பேரும் பலியாகி உள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் இந்தியாவில் 74493 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 35,999 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 15,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.