குடும்பத்தோடு மாமியார் வீட்டுக்கு போய் வந்த வருண் அதிர்ச்சி.. துப்பாக்கியால் வரவேற்ற கொள்ளையர்கள்
Recommended Video
டெல்லி: டெல்லியில் தம்பதி தங்களது வீட்டு கார் பார்க்கில் வாகனத்தை நிறுத்திய போது முகமூடி ணிந்து வந்த 3 பேர் துப்பாக்கி முனையில் அவர்களிடம் கொள்ளை அடித்து செல்கிறார்கள். இந்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் வருண் பஹல். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், மாமியாரின் வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு காரில் திரும்பி உள்ளார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர்.
வருண் பஹல் காரை தனது வீட்டின் கார் பார்க்கிங் நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்கி செல்ல முயன்றுள்ளார். அவரது மனைவியும் காரை திறக்க முயன்றுள்ளார். அப்போது முகமூடி அணிந்திருந்த பேரும் திடீரென துப்பாக்கியை காட்டி வருணை மிரட்டியுள்ளனர். சத்தம் போட்டால் சுட்டுக்கொன்றுவிடுவோம் என மிரட்டி உள்ளனர்.
#WATCH Delhi: Family robbed at gunpoint by three masked miscreants at the parking of their residence in Model Town area around 3 am today. pic.twitter.com/KLFWbkMVpZ
— ANI (@ANI) July 1, 2019
காருக்குள் இருந்த மனைவி அதிர்ச்சியில் காரைவிட்டு இறங்கவில்லை. காருக்குள் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தன. இந்த சூழலால் அதிர்ச்சி அடைந்த வருண் அவர்களிடம் தான் அணிந்திருந்த தங்க பிரேஸ்லெட்டை கழட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்த புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த காட்சிகள் வருணின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் வருணின் மெர்சிடிஸ் காரை 3பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தது தெரியவந்தது. வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்ற வருணின் காரை உடனே பின் தொடர்ந்து வந்த 3 பேரும் துப்பாக்கி முனையில் வழிபறி செய்கின்றனர்.
இது தொடர்பாக வருண் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடிவருகிறார்கள்.