உலகம் முழுவதும் கொரோனாவால் 18.07 கோடி பேர் பாதிப்பு - 16.54 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,21,501 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 3,94,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,07,48,172 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 321,501 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, பிரேசில் அதிகம் பாதிக்கப்பட்டது. பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையாக பரவத் தொடங்கியது இதில் இந்தியாவில் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் படிப்படியாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,07,48,172 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 321,501 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது.
ஸ்வீட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 83 நாட்களுக்கு பிறகு.. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக குறைந்தது!
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 7,948 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39,15,493 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,14,31,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 81,110 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல நாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.