உலகளவில் கொரோனாவில் இருந்து 2.07 கோடி பேர் மீண்டனர் - 9.24 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800 க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 6,676,601 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 47.50 லட்சம் பேரும் பிரேசிலில் 43 லட்சம் பேரும் ரஷ்யாவில் 10 லட்சம் பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரு, கொலம்பியா நாடுகளில் 7 லட்சம் பேரும், மெக்சிக்கோவில் 6.63 லட்சம் பேரும், தென் ஆப்பிரிக்காவில் 6.48 லட்சம் பேரும் ஸ்பெயின் நாட்டில் 5.76 லட்சம் பேரும் அர்ஜென்டினாவில் 5.46லட்சம் பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - மருத்துவமனையில் சிகிச்சை
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அங்கு 198,128 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் 1,31274 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 78614 பேரும், மெக்சிகோவில் 70604 பேரும், இங்கிலாந்தில் 41ஆயிரம் பேரும், இத்தாலியில் 35 ஆயிரம் பேரும் கொரோனாவிற்க உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பெரு நாடுகளில் 30 ஆயிரம் பேரும்,ஸ்பெயின் நாட்டில் 29 ஆயிரம் பேரும், ஈரானில் 23ஆயிரம் பேரும் கொலம்பியாவில் 22 ஆயிரம் பேரும் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.