கிடுகிடு.. ஒரே நாளில் 65,002 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் மொத்த பாதிப்பு 25 லட்சத்தை கடந்தது
டெல்லி: இந்தியாவில், ஒரே நாளில், கொரோனா பாதிப்பு 65,002 என்ற அளவுக்கு பதிவாகியுள்ளது. எனவே மொத்த கேஸ்கள் எண்ணிக்கை, 25.26 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 49,036 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் கூறியுள்ள அம்சங்கள்:
- ஒரே நாளில், கொரோனா பாதிப்பு 65,002 என பதிவாகியுள்ளது
- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்து, 25.26 லட்சமாக உயர்ந்துள்ளது
- 18 லட்சம் பேர், இதுவரை, கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்
- நாட்டின், கொரோனா மீட்பு விகிதம் 71.61 சதவீதம் என்ற அளவில் உள்ளது
- கடந்த 7ம் தேதி முதல், 11ம் தேதியை தவிர்த்துவிட்டு பார்த்தால் தினமும், 60,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்
- நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 49,036 என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் 996 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்
எடப்பாடி பழனிசாமி..ஒருபக்கம்...மறுபக்கம் ஓபிஎஸ்...மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை!!
Comments
English summary
A spike of 65,002 cases took India's COVID-19 tally past 25 lakh on Saturday just a day after it reached the 24-lakh mark, while 18 lakh people have so far recuperated from the disease pushing the recovery rate to 71.61 percent.
Story first published: Saturday, August 15, 2020, 11:57 [IST]