உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் 4,24,61,333 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 3,14,14,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,24,61,333 ஆக உயர்ந்துள்ளது. கொடிய கொரோனா வைரஸை எதிர்த்து போராடி 3,14,14,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,24,61,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,14,14,076 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11,48,694பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 98 லட்சத்து 98 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76,289 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 87,45,307 பேரை கொரோனா பாதித்துள்ளது. 2,29,280 பேர் இந்த கொடிய நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். 56,94,699 பேர் குணமடைந்துள்ள நிலையில் 28,21,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது உள்ளது. அங்கு 78,13,668 பேரை கொரோனா பாதித்துள்ளது. 1,17,992பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். 70,13,569 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 6,82,107பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.