என்னதான் நடக்குது.. சிறுத்தைக்கு பால் கொடுக்கும் சிங்கம்.. நாய்க்குட்டிக்கு பால் கொடுக்குது பசு
டெல்லி: நாய்க்குட்டிகளுக்கு பசுமாடு பால் கொடுக்கும் நெகிழ்ச்சி நிகழ்வு வைரலாக சுற்றி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பாக, குஜராத் கிர் வனப்பகுதியில், பெண் சிங்கம் தனது குட்டிகளுடன், சிறுத்தை குட்டியொன்றுக்கும் சேர்த்து, பால் கொடுத்தது.
இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. இதை கண்ணால் கண்ட வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை புகைப்படமாக பிடித்துக்கொண்டனர். இந்த புகைப்படம் வைரலாக சுற்றிய நிலையில், இப்போது உத்தர பிரதேசத்தில் நாய்க் குட்டிகளுக்கு பசு பால் கொடுத்த சம்பவமும் வைரலாகியுள்ளது.
SubhanAllah, it further strengthens my believe on the fact that Allah SWT takes the responsibility of feeding his creatures!
— SaiM SHah (@SaiMSHa70721709) January 9, 2019
👌🏾❤️ https://t.co/ylX71yOSlb
குட்டிகளை ஈன்ற நாய் மரணமடைந்த நிலையில், குட்டி நாய்களுக்கு பசு பால் கொடுத்து வருகிறதாம். மனிதநேயம் என்று சொல்வார்கள். உலகில் அவையெல்லாம் குறைந்துவிட்டன. ஆனால், மிருக நேயம்தான் இப்போது அதிகரித்துள்ளது. அவற்றிடமிருந்துதான் பேதம் மறக்கும் ஒற்றுமையை எப்படி மீட்டெடுப்பது என்பதை மனித இனம் கற்கும் காலம் வந்துள்ளது. ஆம், கலி காலம் வந்துள்ளது.
Leopard Mowgli and Lioness Raksha! One of its kind and amazing event in Gir Forest- Nature’s Wonderland. @CCF_Wildlife @PccfS @HoffPccf @drrajivguptaias @CMOGuj @PMOIndia @dcfsasangir @DCFGirEastDhari @DCF_Junagadh @GujForestDept pic.twitter.com/e4IgMhqlS7
— DCF_GirWest (@DGirwest) January 3, 2019