என்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா? டி. ராஜா பாய்ச்சல்
Recommended Video
டெல்லி: வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற மகாராஷ்டிரா மாநில பாஜகவின் தேர்தல் வாக்குறுதியானது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று மும்பையில் வெளியிட்டது.
சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு
பாரத ரத்னா விருது
அதில், சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
டி. ராஜா கருத்து
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது: மகாத்மா காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம்.
சாவர்க்கர் குற்றவாளி
மகாத்மாவை படுகொலை செய்த வழக்கில் வீரசாவர்க்கர் ஒரு குற்றவாளி. அந்த வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்துவது மிகப் பெரிய முரண்.
கோட்சேவுக்கும் விருதா?
இன்று சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வேண்டும் என்பார்கள்.. நாளை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொலையாளி கோட்சேவுக்கும் கூட பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவார்கள். இதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு டி. ராஜா கூறினார்.