கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது. அதாவது இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video
கொரோனாவின் வீரியத்தை குறைத்து அதை ஒன்றுமில்லாததாக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கட்டுக்கடங்காமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் 1619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 150 பேர் குணமடைந்துவிட்டனர். பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சேலத்தில் கொரோனா பாதித்த இந்தோனேஷியர்கள் சென்று வந்த 5 மசூதிகளை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 பேர் டெல்லியில் உள்ள வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.