காஷ்மீரிலிருந்து வந்த 100 பேர் குழு.. டெல்லியில் அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு
Recommended Video
டெல்லி: காஷ்மீரை சேர்ந்த சுமார் 100 பேர் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இணையதள சேவைகள் இன்னும் பல இடங்களில் திரும்பவில்லை.
இந்த நிலையில், டெல்லி வந்துள்ள சுமார் 100 பேர் கொண்ட காஷ்மீர் பஞ்சாயத்து சங்கத்தின் குழுவினர், அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகிறார்கள். இவர்களில் பலர், காஷ்மீர் மாநிலத்தில் வசிப்பவர்கள். காஷ்மீரில் நிலவும் நிலவரம், தங்களது தேவைகள் குறித்து அமித்ஷாவிடம் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
Delhi: A delegation of Jammu & Kashmir Panchayat Association arrived at Ministry of Home Affairs to meet Union Home Minister Amit Shah, over abrogation of #Article370 & 35A in J&K. pic.twitter.com/Deon1dGlI7
— ANI (@ANI) September 3, 2019
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அரசு கூறி வரும் நிலையில், அங்கே போராட்டங்கள் நடப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் சீனியர் தலைவர் ராகுல் காந்தியும், இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் பஞ்சாயத்து குழு, அமித்ஷாவை வந்து சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. எந்த மாதிரி விஷயங்களை அவர்கள் பேச வந்துள்ளனர் என்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை