ஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த "ஆண்ட்டி"யின் பேச்சு!
Recommended Video
டெல்லி: குட்டை ஆடை அணிந்திருக்கும் பெண்களை நிர்வாணமாக்கி அவர்களை பலாத்காரம் செய்யுங்கள் என நடுத்தர வயது பெண் ஒருவர் அங்கிருந்த ஆண்களிடம் அறிவுறுத்திய வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாலியல் பலாத்காரம் என்பது பல்கி பெருகிவிட்டது. இதை தடுக்க பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால்
இளம் பெண்களை பெண் ஒருவரே பலாத்காரம் செய்யுங்கள் என்று கூறும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
ஒரு உணவகத்துக்கு அரை குறை ஆடைகளுடன் சில பெண்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், அங்கிருந்த ஆண்களை அழைத்து இதுபோல் குட்டை ஆடை அணிந்து வரும் பெண்கள் நீங்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதுபோல் அணிந்துள்ளனர்.
கேரளாவை உறைய வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவங்கள்.. பெண் புகாரால் அம்பலமான அசிங்கம்
இளம்பெண்கள்
எனவே அவர்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள் என அந்த பெண் கூறியதை கேட்டு குட்டை ஆடை அணிந்து வந்த இளம் பெண்கள் ஷாக்காகிவிடுகின்றனர். இவ்வாறு கூறிவிட்டு அந்த பெண் அங்கிருந்த ஷாப்பிங் சென்டருக்கு செல்கிறார். அவர் பின்னாலேயே வீடியோ கேமராவை ஆன் செய்து விட்டு அந்த இளம் பெண்களும் செல்கின்றனர்.
காதில்
அப்போது இளம்பெண்களை பலாத்காரம் செய்யுமாறு கூறியதற்கு மன்னிப்பு கேளுங்கள் என்கின்றனர். ஆனால் அந்த பெண்ணோ இவர்கள் கூறுவதை எதையும் காதில் போட்டு கொள்ளாமல் அங்கும் இங்கும் சுற்றி வருகிறார்.
மன்னிப்பு
அந்த பெண் எங்கு சென்றாலும் பின்னாலேயே சென்ற அந்த பெண்களால் எரிச்சல் அடைந்த அந்த பெண் அந்த கடையில் உள்ள ஊழியர்களை அழைத்து போலீஸை அழைக்குமாறு கூறுகிறார். பின்னர் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா. எத்தனை தைரியம் உங்களுக்கு என கடிந்து கொள்கிறார்.
மன்னிப்பு
அப்போது அங்கு வந்த இன்னொரு பெண்ணிடம் இந்த இளம் பெண்கள் நடந்ததை கூற அவரும் அந்த பெண்ணை கடிந்து கொள்கிறார். "உங்களுக்கு எத்தனை அறுவறுக்கத்தக்க மனப்பான்மை. பெண்கள் அவர்கள் விருப்பப்படி ஆடை அணிவது அவர்களது உரிமை. எனவே அந்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்கிறார்.
அதிர்ச்சி
அதையும் அந்த பெண் காதில் போட்டு கொள்ளவில்லை. மாறாக அந்த பெண்கள் எடுக்கும் வீடியோவில் வந்து என்னுடைய வார்த்தையை இந்தியா முழுவதும் உள்ள ஆண்கள் கேளுங்கள். இது போல் குட்டை ஆடை அணியும் பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.