டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை விட்டுடுங்க.. உயிருக்கு போராடிய நிலையில் கெஞ்சிய இளைஞர்.. டெல்லி கலவரம்.. திடுக் புகைப்படம்!

டெல்லியில் நடக்கும் கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடக்கும் கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில புகைப்படங்கள் மனதை உருக்கும் வகையில் உள்ளது.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று முதல் நடந்து வருகிறது. இந்த பெரும் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர்.

    என்ன போராட்டம்

    என்ன போராட்டம்

    இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிக குறி வைத்து தாக்கப்பட்டார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து கொளுத்தப்பட்டது. இஸ்லாமிய பெயர்கள் கொண்ட கடைகள் எல்லாம் கொளுத்தப்பட்டது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த கலவரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    நேற்று இஸ்லாமியர்கள்

    அதேபோல் நேற்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் சிறிய மசூதி ஒன்றும் பஜன்பூரா பகுதியில் கொளுத்தப்பட்டது. . அந்த மசூதி மீது கலவரம் செய்யும் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிகிறார். இந்த நொடி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் முழுக்க வைரலாகி உள்ளது. ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui.) எடுத்த புகைப்படங்கள் ஆகும் இது.

    யார் எடுத்த புகைப்படம்

    இவர் எடுத்த புகைப்படங்கள் டெல்லி கலவரத்திற்கு பெரிய ஆதாரமாக மாறியுள்ளது. முக்கியமாக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுற்றி நின்று கலவரக்காரர்கள் தாக்கும் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது. அந்த இளைஞர் தன்னை விட்டு விடுங்கள் என்று உயிருக்கு கெஞ்சிய நேரத்திலும் கூட அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி இருக்கிறார்கள். அவர் ரத்தம் வடிய தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை சுற்றி ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கையில் குச்சியுடன் பலர் தாக்க தயாராக இருக்கிறார்கள்.

    கலவரம் எப்படி

    கலவரம் எப்படி

    இந்த புகைப்படம்தான் டெல்லி கலவரத்தை அப்படியே எடுத்துக்காட்டி இருக்கிறது. உலகம் முழுக்க பலர் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். இதுவும் டேனிஷ் எடுத்த புகைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. .நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் இஸ்லாமியர்கள். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    English summary
    Delhi CAA Violence: A Muslim man begged for his life from rioters, photos goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X