டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்டார்!
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக தற்போது 90000க்கும் அதிகமான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. 4878042 பேர் இந்தியாவில் தற்போது வரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் அரசியல் தலைவர்களும் கொரோனா காரணமாக வரிசையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல முக்கிய எம்எல்ஏக்கள் இதனால் உயிரிழந்த துயரங்களும் நடந்தது. இன்று மட்டும் 25 நாடாளுமன்ற எம்பிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவிற்கு லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், விரைவில் உடல் குணம் அடைந்ததும் பணிக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.