தமிழக விவசாயிகள் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் யாருடையது தெரியுமா?.. அதிர்ச்சி கதைகள்!
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கையில் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கையில் வைத்திருக்கும் மண்டை ஓடுகள் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த மண்டை ஓடுகளுக்கு பின் பல சோக கதைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் 29 மாநில விவசாயிகள் போராடி வருகிறார்கள். 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
இவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழர்கள் போராடினாலும் வித்தியாசம்தான்.. டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகள்
மண்டை ஓடுகள்
இதில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராடி வருகிறார்கள். மண்டை ஓடுகளை பலர் கையில் வைத்து போராடி வருகின்றனர். சிலர் கழுத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை வைத்து மாலை அணிந்து போராடி வருகின்றனர்.
என்ன கதைகள்
இந்த எலும்புக்கூடுகளை இவர்கள் வெறுமனே சுடுகாடு சென்று எடுத்து வரவில்லை. இது வறுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள் ஆகும். போராடும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட தங்கள் சக விவசாயிகளின் மண்டை ஓடுகளைத்தான் இப்படி வைத்து இருக்கிறார்கள். ஆம் விவசாயம் பொய்த்துப் போய் இழப்புகளை சந்தித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள்தான் அது.
கண்ணீர்
இவர்களில் பலர் டெல்டா மாவட்ட விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்திருக்கும் போது சில விவசாயிகள் கண்ணீர் விட்டபடி இருந்தனர். இந்த எலும்புக்கூடுகள் கதையை கேட்ட வெளிமாநில விவசாயிகளும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.
சிலர் பெண்கள்
இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளை போலவே ராஜஸ்தான், மத்திய பிரதேச விவசாயிகளும் ''இறந்தவர்கள்'' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தங்கள் வீட்டில் இறந்து போன விவசாயிகளின் புகைப்படங்களை அவர்கள் எடுத்து வந்தனர். புகைப்படங்களை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.