டெல்லியில் பரபரப்பு.. நீதிபதி மனைவி, மகனை சுட்ட பாதுகாவலர்.. .மனைவி பலி.. மகன் மூளைச் சாவு!
டெல்லியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டதால், அந்த பெண் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டதால், அந்த நீதிபதியின் மனைவி ரீத்து மரணம் அடைந்துள்ளார்.
நீதிபதியின் மகன் துருவ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூளை மரணம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருக்கிறார் கிருஷ்னன் காண்ட் சர்மா. இவருடைய மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டார்
அவர்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தி இருப்பது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் மனைவிக்கு நெஞ்சில் அடிப்பட்டுள்ளது. மகனுக்கு குண்டு பாய்ந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.
சொல்லிவிட்டு சுட்டார்
போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் இரண்டு வருடமாக அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். நீதிபதி கிருஷ்னனுக்கு கால் செய்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், உங்கள் மகன் மற்றும் மனைவியை கொலை செய்ய போகிறேன் என்று சொல்லிவிட்டு சுட்டார். இதுவரை இவர்களுக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் வந்தது இல்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.
தாக்கி உள்ளார்
இந்த நிலையில், அந்த போலீஸ் அதிகாரி, அந்த இருவரையும் சுடும் முன் மோசமாக தாக்கி உள்ளார். முக்கியமாக நீதிபதியின் மனைவியை மோசமாக அடித்துள்ளார். பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்தார்
இந்த துப்பாக்கி சூடு காரணமாக தற்போது அந்த நீதிபதியின் மனைவி ரீத்து பலியாகி உள்ளார். இதயத்தில் பாய்ந்த குண்டு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டு உள்ளது. நிறைய ரத்த போக்கு ஏற்பட்ட காரணத்தால் உயிர்பிழைக்க வைக்க முடியவில்லை என்று தகவல் வந்துள்ளது.
மூளை மரணம்
அதேபோல் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் துருவ் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறான். அவனுக்கு தற்போது மூளை மரணம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலையில் குண்டு பாய்ந்த காரணத்தால் மூளை மரணம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.