ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை!
டெல்லி: ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மே 30 ஆம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது.
இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் ப.சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும் இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சொந்த நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நாள்தோறும் பங்கீடு அடிப்படையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர்.. டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்
இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மே மாதம் 30 ஆம் தேதி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.