பரபரப்பு வீடியோ.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற கார் முன் விழுந்த நபர்!
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற கார் முன் விழுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற பாதுகாப்பு வாகனம் முன்பாக ஒருவர் திடீரென பாய்ந்து வந்து விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஒடிச்சென்று அவரை மடக்கி பிடித்து இழுத்துச் சென்றனர். அவரிடம் விழுந்ததற்கான காரணத்தை கேட்ட போலீசார், அவரது பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆதார் கார்டில் பெயரை மாற்ற பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
#WATCH Delhi: A man came in front of Defence Minister Rajnath Singh's convoy near Parliament, today. He claimed that he wanted to meet Prime Minister Narendra Modi. He was later detained by the police. pic.twitter.com/yunm3vsVzr
— ANI (@ANI) December 3, 2019
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,.
நாய்களை புலியாக மாற்றிய கர்நாடகா விவசாயிகள்.. ஏன் தெரியுமா?