நிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. மனைவி புகாரால் தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்
Recommended Video
டெல்லி: நிம்மதி வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு கணவன் ஓடிய நிலையில் அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என மனைவி போலீசில் புகார் அளித்தார். இதைடுத்து அவரை கண்டுபிடித்து மனைவியிடமே டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.
டெல்லி பிதம்புரா பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் குப்தா வயது 52. இவர் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் திடீரென வீட்டை வீட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. கணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி. தன் கணவன் காணமால் போனதாக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி மயூரா போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக்கொண்டு துரிதமாக செயல்பட்டு தீவிரமாக கவுதமை தேடிய போலீசார், அப்போது அவர் வீட்டின் பகுதியில் இருந்து அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செயதனர்.
கவுதம் குப்தா கோகட் என்கிளேவ் மெட்ரோ ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் மூலம் இங்கு தான் செல்கிறார் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். காலை 9:10 மணியளவில் காஜியாபாத் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிய குப்தா பின்னர், காஷ்மீர் கேட் நிலையத்தில் இறங்கி காலை 9:47 மணிக்கு ஐ.எஸ்.பி.டி சென்று உள்ளார்.
டீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்!
இப்படி ஒவ்வொரு சிசிடிவி கேமராவாக ஆய்வு செய்த போலீசார் எங்கு சென்ற இடம் எல்லாம் தேடினர். கடைசியாக உத்தரகாண்ட் பேருந்து நிலையம் அருகே குப்தா இருப்பது சிசிடிவி மூலம் கண்டுபிடித்தனர்.
இதன் பின்னர் கவுதம் குப்தாவின் குடும்பத்தினருடன் போலீசார் ஹரித்வாருக்கு சென்றார்கள் அங்கு அவர்கள் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து, கவுதம் குப்தா ஒரு ஓட்டலில் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.. இதையடுத்து அவரை மீட்டு டெல்லிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு வைத்து கவுதம் குப்தா விடம் போலீசார் நடத்திய விசாரணையில் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க சென்றதாகவும் அதற்காகத்தான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்றதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.