டென்ஷனில் டெல்லி... பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையால் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை!
டெல்லி: பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கிற எச்சரிக்கையால் டெல்லியில் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர்.
இந்த முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனிடையே டெல்லியிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து இன்று டெல்லி நகரத்தின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
Comments
English summary
Delhi Police Special Cell is conducting raids at several locations in the city after receiving inputs on likely terror strike.