டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாக்கிங்.. ஒரே நாளில் இத்தனை கிலோவா.. மூட்டை மூட்டையாக பிடிபட்ட ஹெராயின்.. அதிர்ச்சி செய்தி!

மும்பையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 330 கிலோ ஹெராயின் டெல்லி சிறப்பு போலீஸ் படையால் கைப்பற்றப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 330 கிலோ ஹெராயின் டெல்லி சிறப்பு போலீஸ் படையால் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதற்கு முன் ஒரே நாளில் இவ்வளவு போதை பொருளை கைப்பற்றியது இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் போதை பொருட்கள் இந்தியாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு திருட்டுத்தனமாக அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இது கடந்த மூன்று மாதங்களில் அதிகம் ஆனதாக புகார்கள் எழுந்தது. முக்கியமாக ஹெராயின், அபீன், கொக்கெய்ன் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்துள்ளது.

ஸ்பெஷல் டீம்

ஸ்பெஷல் டீம்

இந்த கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறியதை அடுத்து டெல்லி போலீஸ் தலைமையில் இதற்காக ஸ்பெஷல் டீம் ஒன்று உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு

நேற்று இரவு

இந்த நிலையில் நேற்று மும்பை துறைமுகத்தில் மொத்தம் 130 கிலோ ஹெராயின் பிடிக்கப்பட்டது. கண்டெய்னர் ஒன்றில் இந்த ஹெராயின் வைக்கப்பட்டு இருந்தது. மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், நள்ளிரவில் இந்த ஹெராயின் மூட்டைகளை கண்டுபிடித்தனர். இது ஆப்கானிஸ்தானில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டுள்ளது.

எப்படி இருந்தது

எப்படி இருந்தது

இதன் மதிப்பு 1320 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹெராயின் மிக சரியாக பதப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. யாரும் சந்தேக படக்கூடாது என்பதற்காக இதை சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்து கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் மோப்ப நாய்களின் தீவிர தேடுதல் காரணமாக இந்த ஹெராயின் பிடிப்பட்டது.

மொத்தம் எவ்வளவு

மொத்தம் எவ்வளவு

இந்த தேடுதல் ஆபரேஷனில் நேற்று காலையில் இருந்து இரவு வரை மொத்தம் 330 கிலோ ஹெராயின் பிடிபட்டு இருக்கிறது. இதற்கு முன் ஒரே நாளில் இவ்வளவு போதை பொருளை கைப்பற்றியது இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார். மும்பையில் போதை பொருள் நெட்வொர்க் இவ்வளவு பெரிதாக வளர்ந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

English summary
Delhi Police Special Cell has seized over 330kg of Heroin in Navi Mumbai yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X