லோக் சபாவில்...திமுக எம்பி கதிர் ஆனந்த் புகார்...டெல்லி போலீசார் விசாரணை துவக்கம்!!
டெல்லி: உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் நேற்று லோக் சபாவில் புகார் அளித்து இருந்த நிலையில் இதுகுறித்து இன்று டெல்லியில் இருக்கும் சாணக்கியாபுரி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் திமுக எம்பி கதிர் ஆனந்த். வேலூர் லோக் சபா எம்பியாக முதன் முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளார்.
முடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்
வங்கி மசோதா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. அவை துவங்குவதற்கு முன்பே முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன்படி, தினமும் கூச்சல், குழப்பத்துடன் முக்கிய மசோதாக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நேற்றும் வங்கி திருத்த சட்ட மசோதா மற்றும், தொழிலாளர் திருத்த சட்ட மசோதாக்கள் நிறைவேறி இருக்கின்றன.
தமிழ்நாடு
இந்த நிலையில் நேற்று லோக்சபா சபா துவங்கியபோது திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்த புகாரில், ''நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் எனக்கு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தங்களை என்னிடம் உளவுத்துறையினர் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
உறுப்பினர்
லோக் சபாவில் நான் கேட்க இருக்கும் கேள்விகள் என்னென்ன என்று கேட்டு அறிந்து கொள்ள முயன்றனர். ஒரு லோக் சபா உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
விசாரணை
இதுகுறித்து டெல்லி சாணக்கியபுரி போலீசில் கதிர் ஆனந்த் புகார் கொடுத்து இருந்த நிலையில், போலீசார் விசாரணையை துவக்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் தங்கி இருந்த அறைக்கு வெளியே பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா மற்றும், வருகை பதிவேட்டில் யார் வந்து சென்றனர் என்று தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.