லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் கல்வி ஆண்டு கட்டணத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி தடை
டெல்லி: லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் ஆண்டு கட்டணத்தை உயர்த்த டெல்லி மாநில அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறியதாவது:
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே பள்ளிகள் ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன. இது தொடர்பாக பள்ளிகள் மீது பெற்றோர் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் அனைத்து பள்ளிகளுமே டிரஸ்ட்டுகளால் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.
ஈகோ.. அமெரிக்காவை வீழ்த்த பிளான் போட்டதா சீனா.. கொரோனா தோன்றியது எப்படி? வெளியாகும் விவரங்கள்!
பெற்றோரை இதுபோல் பள்ளிகள் சித்திரவதைக்கும் உளைச்சலுக்கும் உள்ளாக்கக் கூடாது. எந்த ஒரு பள்ளியும் ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்த மாநில அரசின் அனுமதி இல்லாமல் உயர்த்தக் கூடாது.
அரசு விதிகள் என்பது அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.