டெல்லியில் அமித்ஷாவுடன் இன்று இரவு விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் 14 பேர் இன்று இரவு சந்தித்து பேச உள்ளனர்.
மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக 13-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடத்தப்படது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்ப்பட்டன. பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
8 வழி சாலை வழக்கு தீர்ப்பால் சிறிதளவு மகிழ்ச்சி- முழுமையாக ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் 14 அல்லது 15 பேர் இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாரதிய கிஷான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.