ஜனாதிபதி மாளிகையில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று
டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வந்த காவல்துறை உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியிலிருந்த உதவி ஆணையருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவரது அறிக்கைகள் குறித்து இன்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார், ஆனால் அவர் அறிகுறியற்றவர். அவர் மே 13 முதல் தனிமையில் இருந்தார். தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகாரி, பணியாளர்களுக்கு கடமைகளை ஒதுக்குதல், பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் பதுகாப்பு பணியாளர்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் வசித்த கிழக்கு டெல்லி உள்ள கர்கார்டூமா பகுதியில் இருக்கும் அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர் பணிபுரிந்த கட்டடம் குடியரசுத் தலைவர் தங்கியிருக்கும் கட்டடத்திற்கு வெளியே தான் உள்ளது. . இதனால் அங்குக் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது.
இன்று முதல் லாக்டவுன் 4.0 அமலுக்கு வந்தது.. பேருந்து சேவைகளுக்கு அனுமதி.. ஆனால் மாநில அரசு கையில்!
கடந்த மாதம், ஜனாதிபதி மாளிகை (ராஷ்டிரபதி பவன் ) வளாகத்தில் அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், அங்குள்ள சுமார் 115 வீடுகளில் வசிப்பவர்கள் சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டனர். ஜனாதிபதி செயலகத்தின் எந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று இல்லை.
ஏப்ரல் 13 அன்று பி.எல். கபூர் மருத்துவமனையில் உயிரிழந்த மத்திய டெல்லியைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி, ஜனாதிபதியின் செயலகத்தில் பணியாற்றுபவரோ அல்லது ஜனாதிபதி தோட்டத்திலுள்ள குடியிருப்பாளரோ அல்ல என்று கவால்துறையின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.