தனி நபர் செய்த பேரழிவுதான் பண மதிப்பிழப்பு.. ஸ்டாலின் கடும் தாக்கு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2016ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் எந்த விதமான பலனும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 99.3 சதவிகித நோட்டுகள் மீண்டும் வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
People were brought on streets with their money declared illegal. Indians stood in endless lines & many died outside banks, millions of jobs were lost, small industries shut & the economy hit irreversibly. #DestructionByDemonetisation is a one man made disaster for India. pic.twitter.com/MVubuh6Cgt
— M.K.Stalin (@mkstalin) November 8, 2018
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இந்த நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் எப்போது அமையும்... மத்திய அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!
அதில் ''மக்களின் பணம் செல்லாது என்று கூறப்பட்டு அவர்கள் தெருவிற்கு கொண்டு வரப்பட்டார்கள். முடிவில்லாத வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள், பல இந்தியர்கள் வங்கிக்கு வெளியே பலியானார்கள், பலர் வேலையை இழந்தனர், பல சிறு நிறுவனங்கள் மூடப்பட்டது, இந்திய பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.. இந்த நடவடிக்கை ஒரு தனி மனிதர் செய்த பேரழிவு'' என்றுள்ளார்.