தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக வலியுறுத்தல்
டெல்லி: தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர் .பாலு வலியுறுத்தினார்.
மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய நீட் பிஜி 2020ம் ஆண்டிற்கான தேர்வில் அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது புகார். அதேநேரத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸை அளித்தார். அப்போது பேசிய டி.ஆர். பாலு, தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27%இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றார்.
அதே சக்ஸஸ் பார்முலா.. பாமகவிற்கு எதிராக வேல்முருகனை களமிறக்கும் திமுக.. ஸ்டாலின் உடன் சந்திப்பு!
இதேபோல் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான குழுவில் தாம் இந்த பிரச்சனையை எழுப்ப இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.