இந்தியாவில் இன்னொரு மகாபாரத போர் நடக்க வேண்டுமா? சொல்லுங்கள்?.. ரஜினியை கேள்வியால் மடக்கிய ஓவைசி!
பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நடிகர் ரஜினிகாந்த் அர்ஜுனர் மற்றும் கிருஷ்ணர் என்று கூறியது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நடிகர் ரஜினிகாந்த் அர்ஜுனர் மற்றும் கிருஷ்ணர் என்று கூறியது பெரிய வைரலாகி உள்ளது. இது தொடர்பாக மஜ்லீஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். அதில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். மிக முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள். ஆனால் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணர் என்று நான் கூற மாட்டேன் என்று ரஜினி குறிப்பிட்டார்.
கூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்!
பெரிய வைரல்
ரஜினியின் இந்த பேச்சு இணையம் முழுக்க பெரிய வைரலானது. பாஜக ஆதரவாளர்கள் பலர் அட ரஜினி நல்ல எடுத்துக்காட்டு கூறி இருக்கிறாரே. இருவரை குறித்தும் நன்றாக ஆராய்ந்து இருக்கிறாரே என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் ரஜினிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி ரஜினி புராதன நபர்களை அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு பேசலாம் என்று கேட்டுள்ளனர்.
வேறு என்ன
அதேபோல அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள் என்றால் எங்கு குருஷேத்திர போர் நடக்கிறது. மண்ணுக்காக மஹாபாரதத்தில் போர் நடந்தது போல காஷ்மீர் மண்ணுக்காக இவர்கள் போர் செய்ய போகிறார்களா? போர் வரும் என்றால் யார் கர்ணன்? என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
பாஜகவிற்கு எதிராக
காஷ்மீர் மக்களின் நிலை இதில் என்ன? அவர்களை என்ன சொல்லி அழைப்பீர்கள். அவர்கள் என்ன போரில் மடிய போகும் அப்பாவி மக்களா என்றும் கூட ரஜினிக்கு எதிராக பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனாலும் ரஜினியின் இந்த எடுத்துக்காட்டு பாஜகவினரை பெரிய அளவில் கவர்ந்து உள்ளது.
இன்னொரு கேள்வி
இந்த நிலையில்தான் இது தொடர்பாக மஜ்லீஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அவர், அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள் என்று ஒரு தமிழ்நாட்டு நடிகர் சொல்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனுமாக இருக்கட்டும். பிரச்சனை இல்லை.
ஆனால் கேள்வி
ஆனால் இங்கு யார் பாண்டவர்கள். யார் கௌரவர்கள்? இந்தியாவில் இன்னொரு மஹாபாரத போர் நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? என்று அசாதுதீன் ஓவைசி கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு இது தொடர்பாக அளித்த பேட்டியில் இந்தியாவில் மஹாபாரத போர் மீண்டும் நடந்தால் தோல்வி அடைய போகும் கௌரவர்கள் யார்? என்று கேள்வி கேட்டுள்ளார்.
முக்கியம்
அசாதுதீன் ஓவைசியின் இந்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ரஜினியிடம் அவர் மிக சரியான கேள்வியை எழுப்பி இருக்கிறார் என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே சமயம் பாஜக ஆதரவாளர்களும், ரஜினி ரசிகர்களும் இவருக்கு எதிராக கடுமையாக பொங்கி வருகின்றனர்.