இதை நாங்க எதிர்பார்க்கலை.. ஆனால் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது.. அருண் ஜேட்லி
டெல்லி: சட்டமன்ற தேர்தல் முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல்களில் பெரும் பின்னடைவை பாஜக சந்தித்துள்ளது. இந்தநிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கூறியதாவது:
இது மாதிரியான முடிவுகளை எதிர்பார்க்கவில்லை. தோல்வியை பரிசோதனை செய்ய பாஜக தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள இது வாய்ப்பு.
ஒருபுறம் மாநில தலைமையை ஆய்வு செய்யும்படி உள்ளது. மறுபுறம் கூட்டணி நிலையற்ற தன்மை மற்றும் பலதரப்பட்ட கருத்துகளால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
முதல் பந்திலேயே சிக்ஸர்... மிசோரம் முதல்வரின் முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் எதிர்பார்த்தபடி தொகுதிகளை பிடித்தோம். அதில் இழப்பு எதுவும் இல்லை. ஒரே ஆட்சியின் மீது ஏற்பட்ட சோர்வு காரணமாக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கலாம் என்றும் கூறினார்.